Saturday, December 19, 2015



ஒரு மாத இடைவெளியில்
பிறந்த நாம்
உறவுக்குள் பிறந்ததால்
நட்புக்குள் நுழைந்தோம்..
சந்திப்பில் இடைவெளிகள் இருந்த போதிலும்,
உள்ளத்தில் இடைவெளி இருந்ததில்லை..
உள்ளத்தில் ஒன்றும் வையாமல்
எண்ணத்தையெல்லாம்
கொட்டித் தீர்ப்பேன் உன்னிடத்தில்....
திருமணமானால் தான்
திசை மாறிப் போவோம் என்றிருந்தேன்..
திருப்பி எடுக்க முடியாமல்
என் வாழ்வை
திசை திருப்பி விட்டு போவாயென 
கனவிலும் நினைக்கவில்லை..
யோசிக்க மறந்து விட்டாயா...?
நாம் நண்பர்கள் என்பதை...
அதையும் மீறி எம்மாத்திரம்
இடையில் வந்த புது உறவுகள்
உனக்கு பெரிசாய் போனது...?

இன்னும் என் தோழியின் பழைய
நட்பிற்காய்
காத்திருக்கிறேன்..
புரியாமல் போய் விடுமா உனக்கு
யார் செய்தது துரோகம் என....?

0 comments:

Post a Comment

Design by Thanuskaran
>
எங்கள் முகபுத்தக பக்கத்தில் சேர மறக்க வேண்டாம்
×